பள்ளி தேர்வுகள் காரணமாக 'நம்ம ஊர் சந்தை' நிகழ்ச்சி ஒத்திவைப்பு

கோவை : பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுவதால் 'நம்ம ஊர் சந்தை' நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுவதால் 'நம்ம ஊர் சந்தை' நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயல்வாகை என்ற தன்னார்வலர் அமைப்புகள் சார்பில் விவசாயிகளால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள், கோழி மற்றும் முட்டை போன்ற பொருட்கள் ஒரே இடத்தில் 'நம்ம ஊர் சந்தை' என்ற பெயரில் விற்பனை செய்யும் திட்டம் கோவையின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மாநகராட்சி பள்ளி

அதன்படி, நம்ம ஊர் சந்தை திட்டத்தை கோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் அனுமதி வழங்கினர். இதன் ஒரு பகுதியாக நம்ம ஊர் சந்தை திட்டம் வடகோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. 

இந்த சந்தையில் 20-க்கும் மேற்பட்ட கடை அமைக்கப்பட்டு இருந்தது. குறைந்த விலையில் காய்கறிகள் உள்ளிட்ட பல வகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இந்த சந்தையில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். 

இந்த நிலையில், வரும் 13-ம் தேதி வடகோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் காரணத்தால் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் 'நம்ம ஊர் சந்தை' நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...