'பெண் குழந்தைகள் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும்' : நடிகர் விவேக் கருத்தால் சர்ச்சை

பெண் குழந்தைகள் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருப்பது பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் குழந்தைகள் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருப்பது பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 



கோடை விடுமுறை தொடர்பாக நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து பின்வருமாறு :- 

"மாணவ செல்வங்களே, குழந்தைகளே, கோடையைக் கொண்டாடுங்கள். விளையாட்டுக்குப் பின் நிறைய தண்ணீர் அருந்துங்கள். பெண்களே! உங்களுடை அம்மாவுக்கு அடுப்பறையில் உதவுங்கள்; சமையல் கற்றுக்கொள்ளுங்கள். பையன்களே! உங்களுடைய அப்பா வேலைப் பார்க்கும் இடத்தில் சென்று குடும்பத்துக்காக அவர் எப்படியெல்லாம் உழைக்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள். பிணைப்பு உறுதியாகும்!" என ட்விட்டில் சொல்லியிருக்கும் விவேக்கின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

பாலின பாகுபாட்டை சமூகத்திலிருந்து அகற்றும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் இந்த சூழலில், பெண்கள் பணிக்கு சென்று குடும்பத்தை நியமித்து வரும் இந்த காலகட்டத்தில் நடிகர் விவேக் பெண்கள் மீது மீண்டும் அடிப்படியை திணிப்பது போன்ற கருத்தைக் கூறியிருப்பது கண்டனத்திற்கு உரியது என்று பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இன்னும் அடிப்படைவாதம் பேசிக்கொண்டிருக்கும் நபர்கள் நம் நாட்டில் உலவிக்கொண்டிருக்க, பெண்களின் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாட்டில் பல பெண் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஏன்? தமிழகத்தையே ஒரு பெண் முதலமைச்சர் வழி நடத்தி உள்ளார். 

சமையல் செய்வது பெண்களின் வேலை என்பது போன்ற நடிகர் விவேக் பேசியிருப்பது தவறானது என்று சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு கண்டனக் குரல்கள் ஒலித்து வருகிறது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...