செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவன்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெற்றோர் செல்போன் வாங்கித் தராத காரணத்தால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெற்றோர் செல்போன் வாங்கித் தராத காரணத்தால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 



பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. பனியன் தொழிலாளியான இவருக்கு வேணி என்ற மனைவியும், வசந்த், பிரேம்நாத் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். வசந்த 10-ம் வகுப்பும், பிரேம்நாத் 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பிரேம்நாத் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளதாகத் தெரிகிறது. சில நாட்கள் கழித்து வாங்கி தருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். 



இந்த நிலையில், இன்று காலை ரவி வேலைக்கு கிளம்பிய போது, பிரேம்நாத் மீண்டும் போன் கேட்டுள்ளார். சில நாட்கள் கழித்து வாங்கித் தருவதாக சொல்லி விட்டு, ரவி வேலைக்கு சென்று விட்டார். தாயார் வேணியும், வசந்த்தும் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த பிரேம்நாத் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வந்து பார்த்த வேணி மகன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தனது கணவருக்கு தகவல் அளித்தார். 



அதனைத் தொடர்ந்து, போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...