கோவையில் 'மேரகி' நடனப் பள்ளியைத் திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவையில் 'மேரகி' என்ற நடனப் பள்ளியை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.

கோவை: கோவையில் 'மேரகி' என்ற நடனப் பள்ளியை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.



ஆர்க் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து 'மேரகி' என்ற நடனப் பள்ளியை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடனப் பள்ளியை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். தற்போது, ராம்நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடனப்பள்ளி, சிறிது நாட்களுக்கு பிறகு, எஸ்.பி. அலுவலக வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.



மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் சுமார் 40 வகையிலான பாடல்கள், மொழி நடனம் உள்ளிட்டவைகளை தேர்வு செய்து கொள்ளலாம். பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கோடை வகுப்பாக ஒருவாரத்திற்கும் குறைவான நாட்களே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பின்னர், ஜுன் மாதத்தில் தினசரி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...