கூடலூரில் யானை தாக்கி இளைஞர் பலி: பாதுகாப்பு வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்

நீலகிரி: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிர் இழந்த சம்பவத்தில் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கூடலூர் - கேரளா நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிர் இழந்த சம்பவத்தில் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி கூடலூர் - கேரளா நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள கருக்கபாளி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (29). நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில், அப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட வேண்டும், கிராமத்தைச் சுற்றி அகழி வெட்ட வேண்டும், சோலார் மின்வேலி அமைத்து காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை அப்பகுதி மக்கள் தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் உள்ள பாடந்துறை பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் காட்டு யானைகளிடம் இருந்து அப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக தமிழகம் - கேரளா இடையே ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...