தமிழகத்திற்கு உடனடியாக 4 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவு : கைவிரித்த கர்நாடகா

இந்த மே மாதத்திற்குள் தமிழகத்திற்கு உடனடியாக 4 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், தவறினால், கர்நாடகா அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.


இந்த மே மாதத்திற்குள் தமிழகத்திற்கு உடனடியாக 4 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், தவறினால், கர்நாடகா அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

காவிரி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்திற்கு மே மாதத்திற்குள் 4 டி.எம்.சி., தண்ணீரைக் காவிரியில் திறந்துவிட வேண்டும். உத்தரவை மீறினால் மாநில அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும். காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம். 

அதுபற்றி கவலையில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை 8-ம் தேதிக்கு ஒத்தி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக அணைகளில் போதுமான அளவு நீர் இல்லாத நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...