மோசடி வழக்கில் கைதான கோவை தி.மு.க பிரமுகர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்

கோவை: மோசடி வழக்கில் கைதான தி.மு.க., பிரமுகர் ஆறுமுக பாண்டியனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கட்சியின் மேலிடத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

கோவை: மோசடி வழக்கில் கைதான தி.மு.க., பிரமுகர் ஆறுமுக பாண்டியனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கட்சியின் மேலிடத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

புலியகுளம் ரெட் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா ராஜசேகர். இவர் கொடுத்த மோசடி மற்றும் பாலியல் புகாரின் பேரில், இராமநாதபுரம் போலீசார் தி.மு.க., மாணவர் அணியின் கோவை மாவட்ட இணை அமைப்பாளர் ஆறுமுக பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தி.மு.க.,வின் தலைமை கழக ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை அண்ணா அறிவாலயத்திலிருந்து தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது :- கோவை மாநகர வடக்கு மாவட்ட மாணவர் அணியின் இணை அமைப்பாளர் வி. ஆறுமுகப் பாண்டியன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கழகத்தின் உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் 'தற்காலிகமாக நீக்கி' வைக்கப்படுகிறார், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...