பல்லடத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான மனு பரிசீலனையில் கலவரம் : தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் உழவர் பணிக்கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது, நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவை அடித்து உடைக்கப்பட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் உழவர் பணிக்கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது, நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்டவை அடித்து உடைக்கப்பட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

பல்லடம் பேருந்து நிலையம் அருகே தொடக்க வேளாண்மை உழவர் பணிக்கூட்டுறவு சங்கம் உள்ளது. இச்சங்கத்திற்கான தேர்தல் மற்றும் வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம் தேதியன்று தேர்தல் அலுவலர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், ஆளும் அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தி.மு.க., அ.தி.மு.க. ,உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு பெருமளவு திரண்டிருந்தனர்.



தேர்தல் அலுவலர் கண்ணன் மனுக்களைப் பரிசீலனை செய்து கொண்டிருந்த போது, வங்கியில் புகுந்த 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று தேர்தல் அலுவலரிடம் இருந்த மனுக்களைப் பிடுங்கி கிழித்து வீசியது. மேலும், அலுவலகத்தில் இருந்த மேசை, நாற்காலிகள், பல்புகளை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து, தேர்தல் அலுவலர் கண்ணன் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.



இதனைத் தொடர்ந்து, போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், இந்தக் கலவரத்தின் காரணமாக தேர்தல் தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி அறிவித்தார். 

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...