காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் 2 வாரத்தில் அமையும்: திரையுலகினர் நம்பிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்தார் என நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்தார் என நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் திரையுலகினர் சார்பில் அறவழிப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், விஷால், நாசர், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர், நடிகைகள், பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.

இந்நிலையில், இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நடிகர்கள் நாசர், விஷால், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினர். மேலும் இந்தச் சந்திப்பில், காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, திரைத்துறை சார்பில் பெறப்பட்ட கையெழுத்து மனுவை வழங்கினர்.

ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு வெளியில் வந்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொன்வண்ணன் ஆகியோர் கூறியதாவது:- காவிரிக்காகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் திரைத்துறையினர் 5,000 பேர் கையெழுத்திட்ட மனுவை ஆளுநரிடம் அளித்தோம். காவிரி மேலாண்மை வாரியம் 2 வாரத்தில் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்தார், என்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...