குட்கா ஆலை விவகாரத்தில் அமைச்சர் மீது சந்தேகம் வந்தால் அவரிடமும் விசாரணை நடைபெறும்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை: கோவை கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத குட்கா ஆலை விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வந்தால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.

கோவை: கோவை கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத குட்கா ஆலை விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வந்தால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் சோதனை நடத்தி குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசார் சோதனை நடத்திய போது போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் 7 பேரையும் கைது செய்த போலீசார் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர். சோதனை குறித்தும் ,திமுகவினர் கைது செய்யப்பட்டது குறித்தும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது :- 

இந்த சோதனை ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்டது. அன்றைய இரவே தடயவியல் சோதனை நடத்தப்பட்டது. வி.ஐ.பி என்ற பெயரில் குட்கா புகையிலை இருந்தது. மேலும், ஆலை நிர்வாகம் பான்மாசலா, சுவீட் பாக்கு தயாரிக்க மட்டுமே உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், குட்கா பொருட்களை தயாரித்து வந்தது சோதனையில் தெரியவந்தது. மேலும் தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் தளபதி முருகேசன் பொறுப்பில் இருந்த போது ஆலை உரிமையாளர் அமித் ஜெயினின் கட்டிடத்திற்காக சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்றவை பெறப்பட்டுள்ளது. கட்டிடத்திற்கு அனுமதி எதுவும் பெற வில்லை.

அமித்ஜெயினுக்கு தி.மு.க-வை சேர்ந்த தளபதி முருகேசன் பல வகைகளில் உதவியுள்ளார். குட்கா ஆலையில் சோதனை நடத்தப்பட்ட வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. 

4 இன்ஸ்பெக்டர், 7 எஸ்.ஐ மற்றும் 20 போலீஸ் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஓரு தனிப்படை அமித் ஜெயினை பிடிக்க டெல்லி விரைந்துள்ளது. வழக்கு ஆரம்ப நிலையில் இருக்கும் போதே தி.மு.க-வை சேர்ந்த் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உள்நோக்கத்துடன் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர் என்பது தவறு. அதிகாலையில் தான் போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதில் அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை. அரசு நிறுவனங்களில் இருப்பவர்கள், அதிகாரிகள் இந்த சட்டவிரோத குட்கா ஆலை செயல்படுவதில் தொடர்பு இருந்தால் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆலையின் மேலாளர் ரகுராமை கஸ்ட்டியில் எடுத்து விசாரிக்க உள்ளோம். இந்த குட்கா ஆலையின் டீலர், ஏஜென்ஸி உள்ளிட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இதில் தொடர்பு இருக்கின்றதாக சந்தேகம் வந்தால் அவரிடமும் விசாரிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...