உதகை தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி: சுற்றுலாப் பயணிகளை கவர திட்டம்

நீலகிரி: உதகையில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்று முதல் தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி: உதகையில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்று முதல் தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

உதகையில் வரும் 5-ம் தேதி முதல் கோடை விழா தொடங்கவுள்ள நிலையில், நடப்பாண்டு கோடை சீசனை சுற்றுலாப் பயணிகள் பல புதுமைகளுடன் கண்டு களிக்கும் வகையில் சுற்றுலா கமிட்டி பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

அதன் முதற் கட்டமாக உதகை தாவரவியல் பூங்கா சாலையில் கோடை விழாவில் முதல் முறையாக இரவு நேர அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.



உதகை தாவரவியல் பூங்கா சாலையில் இனி பொதுமக்கள் இரவில் பல்வேறு பொருட்களை வாங்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இரவு நேர அங்காடிகளை நேற்று மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். அந்த அங்காடி மாலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர அங்காடி விற்பனை நடைபெறுவதால் குறிப்பிட்ட இடத்தில் சீசன் முடியும் வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...