நீலகிரிக்கு வயது 200: ஆடல் பாடலுடன் கொண்டாடிய பழங்குடியின மக்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் 200-வது வயதைத் தொடுவதையொட்டி அம்மாவட்ட பழங்குடியின மக்கள் ஆடல் பாடலுடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் 200-வது வயதைத் தொடுவதையொட்டி அம்மாவட்ட பழங்குடியின மக்கள் ஆடல் பாடலுடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.



ஜான் சல்லிவன் என்பவரால் கண்டெடுக்கப்பட்டது நீலகிரி மாவட்டம். மலைகளின் அரசியான நீலகிரி இன்று உலகம் போற்றும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு மாவட்டம் புகழ் பெறக்கூடிய இடமாக உருவாகும் என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மாவட்டம் முழுவதும் காடுகளும், மலைகளும் தான் காணப்பட்டது.



ஜான் சல்லிவன் அவர்களின் முயற்சியால் நீலகிரி மாவட்டம் உயிர் பெற்றது. இந்த கால நிலைக்கு ஏற்றவாறு தேயிலை செடிகள், உருளைக் கிழங்கு, போன்ற விவசாயம் மேற்கொள்ளப்பட்டது.



இப்படி படிப்படியாக உருவான நீலகிரி மாவட்டம் காலப்போக்கில் இங்குள்ள பழங்குடியின மக்களால் மேலும் புகழ் பெறத் தொடங்கியது.கலாச்சாரமும், பண்பும் நிறைந்த இம்மாவட்டம் 200-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது அனைத்துத் தரப்பு மலை மாவட்ட மக்களின் பெருமை.

உலக வரைபடத்தில் சுற்றுலா நகரங்களில் மலையரசியும் இடம் பிடித்திருப்பது முக்கியமான ஒன்று. இந்த நிலையில், 200-வது ஆண்டின் சிறப்புமிக்க விழாவை அம்மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். நகரின் வீதிகளின் வழியே ஊர்வலமாக பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்துடனும், பாடலுடனும் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.



இனி வரும் காலங்களில் மலை மாவட்டமான நீலகிரி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தனக்கான அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் எவ்வித ஐயமுமில்லை.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...