இந்திய வரைபடத்தில் இருந்து தமிழகத்தை அகற்றியவர்கள், மொழியை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் : டிடிவி தினகரன்

கோவை : இந்தியா வரைபடத்தில் இருந்து தமிழகத்தையே அகற்றியவர்கள், தமிழ்மொழியை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணித்துள்ளது குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை : இந்தியா வரைபடத்தில் இருந்து தமிழகத்தையே அகற்றியவர்கள், தமிழ்மொழியை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணித்துள்ளது குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது :- சென்னையில் மதுசூதனனுடன் இருக்கும் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்தான் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்தது போகாத ஊருக்கு அவர் வழி சொல்வது போல இருக்கிறது. திவாகரன் போன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. யாருடனும் எனக்கு நெருடல் கிடையாது. சதிகாரர்களின் வலையில் விழுந்தவர்கள் இப்படிப் பேசுகின்றனர். 

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை. பா.ஜ.க., வினருக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி கிடையாது. கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க., செயல்படுகின்றனர். எனவே, நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது, என்றார். 

மேலும், "திவாகரன் மற்றும் தினகரன் விரைவில் காணாமல் போய் விடுவார்கள் என முதலமைச்சர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "முன்னாள் முதலமைச்சர்கள் பலர் காணாமல் போனது போல, எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் காணாமல் போய்விடுவார்கள். தமிழகத்தையே இந்தியா வரைபடத்தில் இருந்து எடுத்துவிட்டனர். தமிழ் மொழியையா மத்திய அரசில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளப்போகின்றனர்," எனக் கூறினார். 

இதைத்தொடர்ந்து, ரூ. 20 விவகாரத்தில் ஆர்.கே. நகரில் முற்றுகையிட்ட பெண்கள் மதுசூதனன் ஆட்கள் என்பதற்கான புகைப்பட ஆதாரத்தையும் செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்ட தினகரன், "இதுபோல நிறைய ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது. மேலும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம் நடத்துகின்றனர். சட்டரீதியாக இதைப் போராடி வெல்வோம். திவாகரன் குறித்த எந்த ஒரு கேள்விகளுக்கு பதில் சொல்ல போவதில்லை. அது நேரத்தை வீணடிக்கும் செயல். 18 எம்.எல்.ஏ., வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்," எனத் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...