சேலம் மாவட்ட ஆட்சியர் மீது காலணி வீசிய முதியவர்

சேலம் : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மீது ஒருவர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்புக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மீது ஒருவர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆர்.பாஜிபக்ரே பொதுமக்களின் குறைகளுக்கான மனுக்களைப் பெற்று வந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த ஒருவர் திடீரென காலில் அணிந்திருந்த காலணியைக் கழற்றி மாவட்ட ஆட்சியர் தலைமீது ஓங்கி வீசினார். இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி சட்டென்று விலகினார். இதனால், அருகில் இருந்தவர் மீது காலணி பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் அவரைப் பிடித்து தாக்கினர். 



சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி, அவரின் கன்னத்தில் அறைந்தார். பிறகு, அவரை அடித்து இழுத்துக்கொண்டு சேலம் டவுன் ஸ்டேஷனுக்கு குண்டுக்கட்டாக இழுத்து சென்றார். இதனால், சற்றுநேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு அவர் பற்றி விசாரிக்கும்போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு காவலர்கள் அவர் உண்மையில் மனநோய் பாதிக்கப்பட்டவரா, இல்லை வேறு ஏதாவது காரணத்துக்காக இப்படி செய்துள்ளாரா என்பது பற்றி தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதுபற்றி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்டதற்கு, ''அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருடைய சொந்த ஊர் ராசிபுரம், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடமும் ஆசீர்வாதம் செய்வதாக காலணியை கழற்றியிருக்கிறார். பிறகு கைது பண்ணி நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்போது நீதிபதிக்கு முத்தம் கொடுக்கப் போயிருக்கிறார். இப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்'' என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...