நிர்மலா தேவி வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய சந்தானம் குழுவிற்கு மேலும் 2 வாரகாலம் அவகாசம்

நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆளுநர் மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆளுநர் மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இதில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய விசாரணையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலிலேயே மாணவிகளிடம் பேசியதாக நிர்மலாதேவி தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 5 நாட்கள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அவர்களது காவல் முடிவடைந்ததையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர்கள் இருவரையும் சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் அழைத்து சென்றனர். ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நீதிமன்றம் விடுமுறை என்ற காரணத்தால் நீதிபதி பரமசிவம் வீட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் மதுரை மத்திய சிறையில் மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, விருதுநகர் சிறையிலேயே தங்களை அடைக்க வேண்டும் எனவும், மதுரையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என முருகனும், கருப்பசாமியும் கேட்டுக் கொண்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற நீதிபதி பரமசிவம், விருதுநகர் சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார். 

இவ்விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருந்தார். மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர், அதிகாரிகள் மற்றும் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில், சந்தானம் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...