சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து ரயில்நிலையத்தை முற்றுகையிட்ட தி.க.,வினர்

கோவை : நெல்லை, செங்கோட்டை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : நெல்லை, செங்கோட்டை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் ரயிலை இயக்கக் கோரியும், கோவையிலிருந்து நெல்லை மற்றும் செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவை மத்திய ரயில் நிலையத்தில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.



இந்த ரயில்மறியல் போராட்டத்தின் போது தென் மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்கவே அகலப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அது செயல்படுத்தப்பட்டும், ரயில்களை அதிக அளவு இயக்கப்படுவதில்லை. ரயில்வே துறையால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என தந்தை பெரியார் திராவிடக் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...