உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஜிப் லைன் சாகச விளையாட்டு

நீலகிரி : உதகையை அடுத்த தொட்டபெட்டா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிப் லைன் சாகச விளையாட்டு போட்டி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.


நீலகிரி : உதகையை அடுத்த தொட்டபெட்டா பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிப் லைன் சாகச விளையாட்டு போட்டி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. இம்மாவட்டத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.



உதகையில் கேபிள் கார் திட்டம் குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தக் கேபிள் கார் திட்டம் கானல் நீராக உள்ள நிலையில், தொட்டபெட்டா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை வளாகத்தில், இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு 102 அடி உயரத்திற்கு கோபுரம் அமைக்கப்பட்டு, கேபிள் கார் போன்ற ஜிப் லைன் சாகச விளையாட்டு, கமோண்டோ பயிற்சி, தொங்கு பாலம் போன்ற விளையாட்டுகள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.



 

இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சாகச விளையாட்டுகள் ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு திறமையை வளர்ப்பதற்கும், அவர்களின் அச்சத்தை போக்குவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...