சிட்டுக் குருவிகளை பாதுகாக்க இணைந்த கோவை தன்னார்வலர்கள்

கோவை: சிட்டுக் குருவிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை பாதுகாப்பது மற்றும் அவை பற்றிய ஆய்வு மேற்கொண்டு கூடுகள் அமைத்துக் கொடுக்கவும் 'நமது சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம்' என்ற திட்டம் கோவை மாநகராட்சி வளாகத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கோவை: சிட்டுக் குருவிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை பாதுகாப்பது மற்றும் அவை பற்றிய ஆய்வு மேற்கொண்டு கூடுகள் அமைத்துக் கொடுக்கவும் 'நமது சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம்' என்ற திட்டம் கோவை மாநகராட்சி வளாகத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.



சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு அமைப்பு, க்யூப் அமைப்பு, மகிந்த்ரா பம்ப் நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கோவை மாநகராட்சியோடு இணைந்து இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.



"சிட்டுக் குருவிகள் இனம் அழிவை நோக்கிப் பயணிக்க பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று அதன் வாழ்விடம் அழிக்கப்பட்டு வருவதே. வீட்டைச் சுற்றியுள்ள தோட்டங்களில் வெளிநாட்டு செடிகளை வளர்ப்பதால் படர விடப்படும் முல்லை, அவரை போன்ற தாவரங்கள் குறைந்து விட்டன. எனவே அவைகளில் இருந்து வெளியே வரும் புழுக்களை சிட்டுக் குருவிகள் தன் குஞ்சுகளுக்கு உணவாக கொடுக்க முடிவதில்லை. மேலும், இப்போது யாரும் வீட்டு முற்றங்களில் தானியங்களை புடைப்பதோ, உணவு பாத்திரங்களை கழுவுவதோ இல்லை. இதனால் குருவிகளுக்கு உணவு கிடைப்பதில்லை. முக்கியமாக, கான்கிரீட் கட்டிடங்கள் குருவிகள் கூடுகட்ட ஏற்றதாக இருப்பதில்லை. இவை அனைத்தையும் சரிசெய்து சிட்டுக் குருவிகளை பாதுகாப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது." என்கிறார் 'க்யூப்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வின்னி பீட்டர்.



இத்திட்டத்தில், கோவை மாநகரில் சிட்டுக்குருவிகள் காணப்படுகின்ற இடங்கள் முதலில் கண்டறியப்பட்டு, அங்கு ஒவ்வொரு மாதமும் சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாக அவ்விடங்களில் உள்ள மக்களின் பங்களிப்போடு சிட்டுக் குருவிகளுக்காகவே அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட 3000 குருவிக் கூடுகள் அமைக்கப்படும். அக்கூடுகள் ஆராய்ச்சி மாணவர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு சிட்டுக் குருவிகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆண்டுதோறும் இத்திட்டத்தின் ஆராய்ச்சி முடிவுகள் முறைப்படி வெளியிடப்பட உள்ளது.

முதற்கட்டமாக மாநகராட்சி அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் குருவிக் கூடுகள் பொருத்தி ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.



மேலும், சிட்டுக் குருவிகள் உள்ள இடங்களில் கூடுகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் '99433 20303' என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் இலவசமாக கூடுகள் அமைத்துத் தரப்படும் என்று தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...