அமைச்சரின் நிர்பந்தத்தால் செட்டாப் பாக்ஸ் வழங்குவது இழுத்தடிப்பு: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

கோவை: கோவை மாவட்டத்திற்கு அமைச்சரின் நிர்பந்தத்தால் செட்டாப் பாக்ஸ்களை வழங்குவது இழுத்தடிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை மாவட்டத்திற்கு அமைச்சரின் நிர்பந்தத்தால் செட்டாப் பாக்ஸ்களை வழங்குவது இழுத்தடிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்டு வரும் செட்டாப் பாக்ஸ்கள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக கோவை ஆபரேட்டர்களுக்கு வழங்கவில்லை. இது குறித்து கோவை மற்றும் சென்னை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் முறையான பதில் அளிக்கப்படவில்லை. மேலும், செட்டாப் பாக்ஸ் வாங்க தலா ரூ. 30 வீதம் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட 2,50,000 விண்ணப்பங்களுக்கான தொகை ஆபரேட்டர்களால் அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனில் செலுத்தப்பட்டது. 

செட்டாப் பாக்ஸ்களுக்கான முழுத்தொகையான ரூ.180 வீதம் அனைத்து செட்டாப் பாக்ஸிற்கான தொகையை செலுத்தியுள்ளோம். இருப்பினும், கோவைக்கு மட்டும் செட்டாப் பாக்ஸ்களை வழங்காமல் அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் மறுத்து வருகிறது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 'அட்சயா' என்ற பெயரில் பந்தய சாலையில் தனியார் கேபிள் டிவி தொடங்கி, அதன்மூலம் செட்டாப் பாகஸ்கள் விற்க திட்டமிட்டுள்ளார். தனியார் செட்டாப் பாக்ஸ்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசு செட்டாப் பாக்ஸுகள் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை, அமைச்சர் தடுக்க நினைப்பது துரோகம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...