அடிதடியில் முடிவடைந்த கூட்டுறவு சங்க தேர்தல்: திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: எதிர்க்கட்சிகள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருப்பூர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: எதிர்க்கட்சிகள் மற்றும் போலீசார் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருப்பூர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் குமரன் சாலையில் செயல்பட்டுவரும் வீட்டு வசதி கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்று தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட அ.தி.மு.க-வை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.அப்போது, தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் மேயர் செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, போலீசார் அ.தி.மு.க-வினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், தி.மு.க-வினரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க-வினர் போலீசாரின் தடையை மீறி வங்கி வளாகத்திற்குள் நுழைந்தனர் இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வினருக்கு சாதகமாக செயல்பட்ட போலீசாரைக் கண்ணடித்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர் இதனிடையே இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு உருவானதை அடுத்து தி.மு.க., கம்யூன்ஸ்ட், உள்ளிட்ட கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேட்பு மனு தேதியை ஒத்திவைத்து தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...