லங்கா கார்னர் பகுதியில் பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றியது மாநகராட்சி

கோவை: கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பகுதியில் அமைந்துள்ள பழமையான தனியார் வணிக வளாகம் சேதமடைந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அக்கட்டிடத்தை இடித்து அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பகுதியில் அமைந்துள்ள பழமையான தனியார் வணிக வளாகம் சேதமடைந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அக்கட்டிடத்தை இடித்து அகற்றி நடவடிக்கை எடுத்தனர். 

அரசு மருத்துவமனை அருகே சுமார் 30 வருடங்களாக இயங்கி வந்த இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், டீ கடைகள், மின் சாதனக் கடைகள், கண் கண்ணாடி கடைகள் என மொத்தம் 14 கடைகள் இயங்கி வந்தன.

இந்நிலையில், கட்டிட வளாகத்தின் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்ததால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள கட்டிடத்தை இடிக்க முடிவு செய்த மாநகராட்சி ஒரு வருடத்திற்கு முன்பே வளாகத்தில் உள்ள 14 கடைகளையும் காலி செய்யுமாறு கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சில கடை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை மேற்கோள்காட்டி வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கடந்த மாதம் வளாகத்தில் அமைந்துள்ள கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனையடுத்து, இன்று காலை கடையில் உள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டிட வளாகம் இடித்து அகற்றப்பட்டது. 

கட்டிடம் அமைக்க கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...