அ.தி.மு.க அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை: கோவையில் முதலமைச்சர் பேட்டி

கோவை: கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

டெல்டா பகுதிகளில் துணை ராணுவ படையினர் வந்துள்ளது பயிற்சிக்காக மட்டுமே தவிற வேறு எதுவும் இல்லை. டி.டி.வி தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோரது இரண்டு கட்சிகளும் நிலைக்காது. விரைவில் காணாமல் போய்விடுவார்கள். சென்னையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், தெலுங்கானா முதல்வரும் எந்த நிலையில் பேசினார்கள் என்று தெரியாது. தற்போது தான் அதுகுறித்து நான் தெரிந்து கொண்டேன்.

அ.தி.மு.க.

பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசியது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கின் அடிப்படையில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களின் உடல்நலக்குறைவு மற்றும் விபத்தின் போது வழங்கப்பட்டு வரும் நிதி எப்போதும் நிறுத்தப்படாது. அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது என்பது தவறான தகவல்.

கர்நாடகாவில் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் தான் அ.தி.மு.க-விற்கு அங்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் வழக்கம் போல் சின்னம் கிடைத்துவிடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...