மேட்டுப்பாளையத்தில் குடியிறுப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் - வீடியோ

கோவை: மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை, கிராம சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை, கிராம சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காட்டு யானைகளின் நடமாட்டமும் இதனால் ஏற்படும் சேதங்களும் அதிகரித்தபடி உள்ளது. இதுவரை உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டில் இருந்து வெளியேறும் யானைகள் வனத்தையொட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தி வந்தது.

ஆனால், அண்மைக் காலமாக நகரையொட்டியுள்ள பகுதிகளுக்குள் யானைகள் உலா வரத்துவங்கியுள்ளது. குறிப்பாக நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளையும் சேதப்படுத்த தொடங்கியுள்ளது.

இரவு நேரங்களில் மட்டும் வனத்தை விட்டு வெளியேறிய யானைகள் தற்போது அதிகாலை நேரத்திலும் வரத் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை நெல்லிமலை வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டுயானை அங்குள்ள சமயபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலை வழியாக எவ்வித அச்சமும் இன்றி சென்றது. அதிகாலை நேரத்தில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் காட்டு யானை சாலையில் நடந்து வருவதைப் பார்த்து வீட்டிற்குள் சென்று ஒடி ஒளியும் நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் சமயபுரம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானி ஆற்றுக்கு தண்ணீர் தேடி வரும் யானைகள் ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் இரண்டு குடியிருப்பினையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளது.

இதனால் அச்சத்தில் உரைந்துள்ள சமயபுரம் கிராம மக்கள் இனியும் காலம் கடத்தாமல் வனத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...