வால்பாறையில் 29-வது சாலை பாதுகாப்பு பேரணி

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் வட்டார போக்குவரத்துக் கழகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வாரப் பேரணி நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் வட்டார போக்குவரத்துக் கழகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வாரப் பேரணி நடைபெற்றது. 



தமிழ்நாடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு பேரணி வால்பாறை நடைபெற்றது. வட்டார போக்குவரத்துக் கழக அலுவலர் நிர்மலாதேவி முன்னிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணி, புதிய பேருந்து நிலையம், காந்திசிலை போன்ற முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. ஏராளமானோர் தலைக்கவசம் உயிர்க்கவசம், தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பைத் தவிர்ப்பீர் போன்ற 34 வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். 



மேலும், பேருந்து, கார், ஆட்டோ, பேருந்து போன்ற வாகனங்களுக்கு விதிமுறைகளை எடுத்துரைக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்துக் கழக அலுவலர் நிர்மலாதேவி, அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்வது மிக முக்கியம் என அனைவருக்கும் அறிவுரை வழங்கினார். தமிழகம் வாகன விபத்தால் உயிர்ச்சேதமில்லாத மாநிலமாக விளங்க அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். 



இதில், வால்பாறை காவல்துறை ஆய்வாளர் திருமேனி, உதவி ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...