யானைகள் வளர்ப்பு முகாமில் பங்கேற்ற யானைகளின் உடல் எடை பரிசோதனை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பகாடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளின் உடல் எடை பரிசோதனை இன்று நடைபெற்றது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பகாடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளின் உடல் எடை பரிசோதனை இன்று நடைபெற்றது. 

முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் 23 வளர்ப்பு யானைகள் உள்ளது. இந்த வளர்ப்பு யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாட்கள் நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல, இந்த ஆண்டும் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்றது. முகாமையொட்டி, வளர்ப்பு யானைகள், யானை சவாரி மற்றும் இதர பணிகளுக்கு ஈடுபடுத்தப்படாமல் 48 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. வளர்ப்பு யானைகளுக்கு புரதச்சத்து மிகுந்த உணவுகள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு யானைகளின் உடல் திறனுக்கேற்ப புரதச்சக்தி உள்ள மருந்து பொருட்களும் கொடுக்கப்பட்டு வந்தன.



இந்த நிலையில், கடந்த மாதம் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நிறைவு பெற்ற நிலையில், இன்று வளர்ப்பு யானைகளின் உடல் எடை பரிசோதனை, தொரப்பள்ளி எடை பரிசோதனை மையத்தில் நடைபெற்றது. இதில், 14 வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் வளர்ப்பு யானைகளின் உடல் திறன் ஆரோக்கியமாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதில் கிருஷ்ணகிரி மற்றும் வண்டலூர் பூங்காவிலிருந்து வந்த யானைகளும் பங்கேற்றது குறிப்பிடதக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...