தாசில்தார் தேர்வு எழுத கழுதைக்கு ஹால்டிக்கெட்

ஜம்மூ காஷ்மீர் : ஜம்மூ காஷ்மீரில் நடைபெற இருக்கும் தாசில்தார் தேர்விற்கான ஹால்டிக்கெட்டில், கழுதை படம் அச்சிடப்பட்டுள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜம்மூ காஷ்மீர் : ஜம்மூ காஷ்மீரில் நடைபெற இருக்கும் தாசில்தார் தேர்விற்கான ஹால்டிக்கெட்டில், கழுதை படம் அச்சிடப்பட்டுள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, மாநில பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தாசில்தார்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நாளை (ஏப்.,29) நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.

கச்சூர் கார் என்பவரது ஹால்டிக்கெட்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக கழுதையின் படம் இடம்பெற்றிருந்த சம்பவம் அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் அதனை, சமூகவலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்டவைகளில் பகிர்ந்தார். காட்டுத்தீ போல பரவிய இப்பதிவு, சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அந்த ஹால்டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டு, விண்ணப்பதாரருக்கு புது ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மூ காஷ்மீர் பணியாளர் தேர்வாணைய ஹால்டிக்கெட்டில் விண்ணப்பதாரர் புகைப்படத்திற்கு பதிலாக விலங்கின் படம் இடம்பெறுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக, 2015ம் ஆண்டில் தேர்வு ஹால்டிக்கெட்டில் பசுவின் படம் இடம்பெற்றிருந்ததாக பலர் தெரிவித்துள்ளனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...