11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு சமுட்டி அடி : எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி

கோவை : ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி என கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.


கோவை : ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி என கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற உத்தரவிட முடியாது. 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது ஆகிய இரண்டு தீர்ப்புகளும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இந்த இரண்டு தீர்ப்புகளும் தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி ஆகும். 

18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும். எம்.எல்.ஏ.,க்களாக தொடரலாம் என்றாலும், கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டுமென்ற உத்தரவு வருமென நம்புகிறேன். தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றன. ஆனால், 3 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க., ஆட்சி தொடரும். அதன்பின், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...