திருப்பூர் : புதிதாக அமைய உள்ள நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இருக்கையை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் : புதிதாக அமைய உள்ள நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இருக்கையை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் மற்றும் பல்லடம் பகுதிகளுக்குட்பட்ட விவசாய நிலங்கள் வழியாக கோவை– கரூர் நெடுஞ்சாலை திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியைக் கண்டித்தும், காங்கேயம் மற்றும் பல்லடம் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி இருக்கை அருகே எழுந்து வந்து முற்றுகையிட்டனர்.
இதனால், குறை தீர்க்கும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை மனுவாக அளிக்க வலியுறுத்தியதை அடுத்து விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் நிலம் துண்டாடப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் இழப்பீடாக விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இருந்து 5 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் மற்றும் பல்லடம் பகுதிகளுக்குட்பட்ட விவசாய நிலங்கள் வழியாக கோவை– கரூர் நெடுஞ்சாலை திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியைக் கண்டித்தும், காங்கேயம் மற்றும் பல்லடம் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி இருக்கை அருகே எழுந்து வந்து முற்றுகையிட்டனர்.
இதனால், குறை தீர்க்கும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை மனுவாக அளிக்க வலியுறுத்தியதை அடுத்து விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் நிலம் துண்டாடப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் இழப்பீடாக விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இருந்து 5 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.