நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு : விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : புதிதாக அமைய உள்ள நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இருக்கையை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் : புதிதாக அமைய உள்ள நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இருக்கையை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் மற்றும் பல்லடம் பகுதிகளுக்குட்பட்ட விவசாய நிலங்கள் வழியாக கோவை– கரூர் நெடுஞ்சாலை திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியைக் கண்டித்தும், காங்கேயம் மற்றும் பல்லடம் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி இருக்கை அருகே எழுந்து வந்து முற்றுகையிட்டனர். 

இதனால், குறை தீர்க்கும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை மனுவாக அளிக்க வலியுறுத்தியதை அடுத்து விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் நிலம் துண்டாடப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் இழப்பீடாக விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இருந்து 5 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...