காவிரி விவகாரத்திற்கும், கர்நாடக தேர்தலுக்கும் தொடர்பில்லை: கோவையில் எச்.ராஜா பேட்டி

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கும், கர்நாடகா தேர்தலுக்கும் எந்தவித சமந்தமும் இல்லை என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கும், கர்நாடகா தேர்தலுக்கும் எந்தவித சமந்தமும் இல்லை என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேட்டில் பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்திற்கு இன்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

கோவையில் மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதித்துள்ளது. தமிழகத்தில் வன்முறையை ஏற்படுத்த தலைமை ஏற்கும் கட்சியாக எதிர்க்கட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மேலும், மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு இங்கு யாரும் போராடுவதில்லை. மத்திய அரசுக்கும், பக்கத்து மாநிலத்திற்கும், இலங்கைக்கும் எதிராகத் தான் இங்கு போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவதாக அவர்கள் சித்தரிக்கிறார்கள்.

தொடர்பு இல்லை

காவிரி விவாகரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை எடுக்கும். நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டது போல 9 பேர் கொண்ட குழுவை சம்மந்தப்பட மாநிலங்கள் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். அதில் கேரளாவும் கர்நாடகாவும் இன்னும் உறுப்பினர்களை நியமிக்கவில்லை. அவர்களை நியமிக்கும் வரை மேலும் இரண்டு வார கால அவகாசத்தை மத்திய அரசு கேட்டிருக்கலாம். அப்படியும் அவர்கள் நியமிக்கப்படவில்லை என்றால் நீதிமன்றமே நியமிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கும். அப்போது மத்திய அரசு, மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு கால அவகாசம் கேட்டதற்கும், கர்நாடக தேர்தலுக்கும் எந்த வித சமந்தமும் இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தி.மு.க தற்போது அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறார்களா?.

குட்கா விவாகரத்தில் சி.பி.ஐ நேர்மையாக விசாரணை செய்யும். பத்திரிக்கையாளர் குறித்த எஸ்.வி.சேகரின் பதிவு தவறானது அவர் மீது சிலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் அது பற்றி நீதிமன்றம் முடிவு எடுக்கும்." என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...