மேட்டுப்பாளையம் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாறையின் மீது மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாறையின் மீது மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 18 பேர் நீலகிரி மாவட்டம் எம்ரால்டு பகுதியில் உள்ள ஒரு கோவில் விஷேச நிகழ்ச்சியில் இசை மேளம் வாசிக்க குழுவாக லாரியில் சென்றுள்ளனர். அத்திகடவு அருகே உள்ள சொரண்டி மேடு என்ற இடத்தில் லாரி சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி சாலையின் ஓரத்தில் இருந்த பாறையின் மீது மோதி கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில், அந்த லாரியில் பயணித்த சுமார் 8 பேர் படுகாயமடைந்தனர். மேலும், 10 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி கிராம மக்கள் மற்றும் போலீசார், படுகாயமடைந்த பாலசுப்ரமணி, மகேஷ், நாகராஜ், சுரேஷ் உள்பட 8 பேரை மீட்டு ஆம்புலனஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...