கோவையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் : விருந்தினர்களை ஆச்சரியப்படுத்திய திருமண வீட்டார்

கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் தொழிலதிபரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உடல், உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்வுகள் விழாவிற்கு வந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.

கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் தொழிலதிபரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உடல், உறுப்பு தானம் விழிப்புணர்வு நிகழ்வுகள் விழாவிற்கு வந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. 

ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் தொழிலதிபரான இமயவன் - அஞ்சுகம் என்பவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உடல், உறுப்பு தானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரங்கு அமைக்கத் திருமண வீட்டாரின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உடல், உறுப்பு தானம் குறித்து கேட்டறிந்ததுடன், உடல், உறுப்பு தானம் செய்யவும் பதிவு செய்து கொண்டனர். 

திருமண விழாக்களில் உறவுகளையும், நண்பர்களையும் பார்த்து மகிழ்ச்சியடைவதோடு மட்டுமில்லாமல், உடல், உறுப்பு தானம் போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக திருமண விழாவிற்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், இதுபோன்று அனைத்து விஷேச நிகழ்வுகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினால், உடல், உறுப்புகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். தங்கள் இல்லங்களில் நடக்கும் விழாக்களிலும் இதுபோல உடல் உறுப்பு தான நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்து இருக்கிறோம் என அவர்கள் கூறினர்.

வழக்கமாக திருமணம் போன்ற விழாக்களில் இறப்பு பற்றி பேசுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், இந்த திருமண வரவேற்பு விழாவில் உடல், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாகத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். திருமண விழாவிற்கு வந்தவர்கள் ஆர்வத்துடன் வந்து விசாரித்து சென்றனர். இதுவரை 40 பேர் உடல், உறுப்பு தானம் செய்யப்பதிவு செய்திருப்பதாக அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.



"உடல், உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருமணப் பத்திரிகை கொடுக்கும்போதே இதுபோன்ற உடல், உறுப்பு தானம் நிகழ்ச்சி நடைபெறுவது பற்றி தெரிவித்திருந்தோம்," எனக் கூறுகின்றனர் புதுமணத் தம்பதிகள். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...