சுற்றுலா வாகனங்களால் நீலகிரி மக்கள் பாதிப்படைவதை தடுக்க அனுமதி அட்டை அறிமுகம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சீசன் சமயங்களில் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா இன்று உதகையில் தொடங்கி வைத்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சீசன் சமயங்களில் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா இன்று உதகையில் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்த சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் வருகை புரிவார்கள்.

அவ்வாறு தங்களது சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருகை தருகின்றனர். இதனால் மாவட்டத்தில் சிறிய நகரங்களான உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரும் வாகனங்கள் குன்னூர் வழியாக ஒரு வழிப்பாதையாக மாற்றி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இவ்வாறு ஒரு வழிப்பாதையாக மாற்றும் நேரங்களில் உள்ளூர் மக்கள் உதகையில் இருந்து தங்களது கிராமப்புறங்களுக்கோ அல்லது நகரில் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கோ செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால், உள்ளூர் மக்கள் பாதிக்காத வகையில், உள்ளூர் வாகனங்களின் தகவல் அடிப்படையில் வாகன உரிமையாளர்களுக்கு வாகன அனுமதி அட்டை பெற உரிய உரிம படிவங்களுடன் அருகிலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யுமாறு மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.



இதன் அடிப்படையில் இன்று உதகையில் உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அட்டை ஓட்டும் நிகழ்வை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.



அந்த அனுமதி அட்டை ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் சீசன் சமயங்களிலும் அவர்கள் செல்லும் பகுதிக்கு காவல் துறையினர் அனுமதி அளிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...