மாயார் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி நீலகிரி ஆட்சியரிடம் அய்யாக்கண்ணு மனு

நீலகிரி : மாயார் ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறித்தி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மனு அளித்தார்.

நீலகிரி : மாயார் ஆற்றில் தடுப்பணை கட்ட  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறித்தி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மனு அளித்தார்.



காவிரி  மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும்  சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள்  நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து மனு  அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம்  மாநில தலைவர் அய்யாக்கண்ணு  பேசுகையில், "சிரப்பூஞ்சியை விட ஆண்டுக்கு அதிக மழை பெய்ய கூடிய இடம் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவலா பகுதியாகும்.  இங்கு, உற்பத்தியாகும் மழை நீர் பாண்டியாறு, புன்னம்பழா ஆற்றின் வழியாக கேரளா மற்றும் கர்நாடாகவிற்கு சென்று வீணாகக்  கடலில் கலக்கிறது. எனவே, மாயார் ஆற்றில் தடுப்பணை கட்டி தமிழகத்திற்கு திருப்பினால் பவானி பாசன விவசாயிகள் பயன்டைவார்கள்.  ஆண்டுக்கு 5 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர்  தமிழ்நாட்டிற்க்கு கிடைக்கும். 

மேலும், கார்ப்பரேட் கம்பெனிகள் இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களை மக்கள் உண்பதால் 50 சதவீதம் பேர் ஆண்மை இழக்கவும், பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழக்க செய்யவும் வாய்ப்புள்ளது. இந்த நிலை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதுடன், ஆறுகளில் தடுப்பணைகள் கட்டியும், ஏரி, குளம், கண்மாய்களை தூர்வாரியும் சீமை கருவேல மரங்களை அகற்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், மத்திய அரசு நதிகளை தேசிய மயமாக்கி அரபிக்கடலிலும், வங்காள விரிகுடாவிலும் வீணாகக்  கடலில் கலக்கும் தண்ணீரை தென்னகத்திற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும்," என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...