கள் இறக்கக் கட்டப்படும் பானைகளை உடைக்கும் போலீசாரை கண்டித்து மனு

கோவை: திருப்பூரில் கள் இறக்குவதற்காகக் கட்டப்படும் பானைகளை போலீசார் உடைப்பதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

கோவை: திருப்பூரில் கள் இறக்குவதற்காகக் கட்டப்படும் பானைகளை போலீசார் உடைப்பதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

பல்லடம், மங்கலம், ராமநாயக்கன்பாளையம், குண்டடம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் தென்னை மரங்களில் கள் இறக்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த பானைகளை காவல்துறையினர் உடைத்ததுடன், விவசாய தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கள் இறக்க அனுமதியுள்ள நிலையில், தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை அமலில் உள்ளது. இது தொடர்பாக வழக்குகளும், கள் இறக்க அனுமதி வழங்கவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளும் பரிசீலனையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினரின் இத்தகைய செயல் விவசாயிகளைப் பாதிப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி பாரியிடம் விவசாயிகள் மனு அளித்தனர். தொடர்ந்து, கள் இறக்க தமிழக அரசு மறுக்கும் பட்சத்தில் மாநில அளவில் கூட்டம் நடத்தி போராட்டம் நடத்தவும், வரும் 10-ம் தேதி கனியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வருவதாக வந்த தகவலையடுத்து, மேற்கு மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...