கோவையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை : மேற்கூரைகள் பறந்ததால் அலறிய ஊழியர்கள்

கோவை : கோவையில் கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் பெரும்பாலான நிறுவனங்களின் மேற்கூரைகள் பறந்ததால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.


கோவை : கோவையில் கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் பெரும்பாலான நிறுவனங்களின் மேற்கூரைகள் பறந்ததால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். 

கோவையில் இன்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த மேற்கூரைகள் பறந்தன. பலத்த சத்தத்துடன் அவை கீழே விழுந்ததை கண்டு ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து கட்டிட வளாகத்தின் உள்ளே ஓடினர்.தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக புழுதி பறந்து அலுவலகத்தினுள் வந்ததால், பழைய கட்டிடத்தில் பணி புரிந்த ஊழியர்கள் கதவை அடைத்து விட்டனர். இந்த சூறாவளி காற்றின் காரணமாக மின் தடையும் ஏற்பட்டதால் சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிறுத்தி விட்டு காற்றின் வேகம் தணிந்த பின்னர் கிளம்பி சென்றனர்.​

இதனைத் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. வெயிலின் உக்கிரத்தால் கடந்த சில தினங்களாக பொதுமக்கள் அவதியடைந்து வந்த நிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக சில்லென்ற காற்று வீசுகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இடையர்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. துடியலூர், கவுண்டம்பாளையம், பீளமேடு, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாலைகளில் சாய்ந்ததால் சிலர் படுகாயம் அடைந்தனர். 

மழை நின்ற பிறகு கோவையின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஈடுபட்டுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...