வால்பாறை, உதகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நீலகிரி : நீலகிரியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


நீலகிரி : நீலகிரியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



உதகையில் கடந்த 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, உதகை மலை ரயில்நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு குறித்தும், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணில் ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள், காவல்துறையினர் என 1௦௦-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் பகுதில் முடிவடைந்தது. மேலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.



இதேபோல, கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் நிர்மலாதேவி மற்றும் வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் திருமேனி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கலந்து கொண்டனர். இப்பேரணியானது, புதிய பேருந்து நிலையத்திலிருந்து தபால் நிலையம் வரை சென்றடைந்தது. 



மேலும், வால்பாறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்காக வால்பாறை சுகாதார மருத்துவர்கள் விவின்பிரசாத், வித்யா ஆகியோர் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...