சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக திகழும் கோவை மாநகராட்சி: தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் விமர்சனம்

கோவை: கோவை மாநகராட்சி சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக திகழ்ந்து வருவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: கோவை மாநகராட்சி சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக திகழ்ந்து வருவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், உப்பிலிபாளையம் அருகே உள்ள ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு, சீரமைக்காமல் கிடக்கும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள், மாநகராட்சி சார்பில் செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள குறைகளை கூறினர். சாலைகள் அமைக்கப்படாமலும், சாலைகள் முழுவதும் புதர்கள் மண்டி கிடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்.



இந்த ஆய்வுக்கு பின்னர் நா.கார்த்திக் கூறுகையில், "தி.மு.க., ஆட்சியின்போது, கோவை மாநகராட்சி பாதாள சாக்கடை பணிக்காக ரூ. 377 கோடி ஒதுக்கப்பட்டு, பாதாள சாக்கடை பணி துவக்கபட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முழுமையாக செயல்படாமல் ஆமை வேகத்தில் இப்பணி நடைபெற்று வருகிறது. மேலும், மாநகராட்சியின் பல பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது. கேபிள் பதிப்பதற்காக ஒரு கிலோ மீட்டருக்கு அனுமதி பெறப்பட்டு, 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழி தோண்டியுள்ளனர். இதனால், பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

இந்தப் பகுதியில் அனைவரும் முழுமையான வரியை செலுத்தியபோதும் கூட இப்பகுதியில் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. கோவையைச் சேர்ந்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எவ்வித பணிகளும் செய்வதில்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், கூட்டணி கட்சிகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். செயழிலந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி திகழ்ந்து வருகிறது. சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாகவும் இருக்கிறது. ஒட்டுமொத்த மாநகராட்சியும் தற்போது முடங்கிக் கிடக்கிறது.

இந்த ஆய்வின்போது, ஜி.வி.ரெசிடென்சி நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் நரசிம்மன், செயலாளர் செல்வகுமார், வார்டு செயலாளர்கள் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...