குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

குட்கா ஊழல் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குட்கா ஊழல் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர், போலீஸ் உயரதிகாரிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சென்னையில், குட்கா வியாபாரிகளிடம் கடந்த 2016 ஜூலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், சிக்கிய ஒரு டைரியில், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி., ராஜேந்திரன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பெயர் இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்தது. அது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டது.

இதனிடையே, இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வு, குட்கா ஊழல் குறித்த லஞ்ச ஒழிப்பு விசாரணையை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.



நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- பல அதிகாரிகள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதால், வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்படுகிறது. அப்போது, தான் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும். இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். குட்கா உற்பத்தி, விற்பனை, சந்தையில் கிடைப்பது உள்ளிட்ட அனைத்தையும் விசாரிக்க வேண்டும். குட்கா ஊழல் தொடர்பாக போதிய விளம்பரம் அளித்து மக்களின் தகவல்களை பெற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...