ஸ்மார்ட் திட்டங்கள் குறித்து நாடாளு., நிலைக்குழுவிடம் கோவை மாநகராட்சி ஆணையர் இன்று விளக்கம்

கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று எடுத்துரைக்கிறார்.

கோவை: கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று எடுத்துரைக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்த 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், கோவையும் இடம்பெற்றிருந்தது. மத்திய - மாநில அரசுகளின் நிதி மற்றும் மாநகராட்சியின் பங்களிப்போடு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மிதிவண்டி பகிர்தல், ஸ்மார்ட் பள்ளிகள், நீர்நிலைகள் மேம்பாடு, சென்சார் போர்டுகள் போன்ற திட்டங்கள் கோவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும், கட்டிடக் கழிவு மறுசுழற்சி மையம், மாதிரி சாலை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வும் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகராட்சியின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் நகரின் பட்டியலில் கோவை ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகராட்சியின் அதிகாரிகள், தங்களின் செயல்பாடுகளை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு இன்று எடுத்துரைக்கின்றனர். கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், அதிகாரிகளிடம் விளக்குகிறார். ராஜ்கோட், பூனே, புவனேஷ்வர், விசாகப்பட்டினம், கொச்சி மற்றும் டெல்லி ஆகிய நகரைச் சேர்ந்த அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர். சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகளில், தமிழகத்தில் இருந்து கோவை மாநகராட்சி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...