15 வருடங்களாக தெருவிளக்கு வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்: திருப்பூரில் 15 வருடங்களுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி தவித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் 15 வருடங்களுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி தவித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட பி.ஏ.பி. நகர், கார்த்திக் நகர் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தெருவிளக்கு வசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் அவ்வழியாக வரும் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.



இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாததால் வெளியில் வரக் கூட பயமாக இருப்பதாகவும், பள்ளிக் குழந்தைகள் இரவு நேரங்களில் டியூசன் சென்று வரும் போது தனியாக வருவதற்கு பயமாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இப்பகுதிக்கு இதுவரை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியைப் பயன்படுத்தி எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகையால், மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக தெருவிளக்குகளை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...