குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து காட்டு யானைகள், வீடுகளின் சுவர்களை இடித்து சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து காட்டு யானைகள், வீடுகளின் சுவர்களை இடித்து சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் அதையொட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறும் யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தி வருகிறது. ஆனால், அண்மை காலமாக நகரையொட்டியுள்ள பகுதிகளுக்குள் யானைகள் உலா வரத் துவங்கியுள்ளதும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீட்டின் சுவர்களை சேதப்படுத்துவதும் பொதுமக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு மேட்டுப்பாளையம் நகரையொட்டியுள்ள சமயபுரம் பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த கருப்புசாமி மற்றும் செல்வராஜ் என்பவர்களின் வீடுகளின் சுவர்களை இடித்துவிட்டு உள்ளே நுழைய முயன்றன. ஆனால், அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பிய காரணத்தினால், சாலையைக் கடந்த யானைகள் பவானி ஆற்றுப்பகுதிக்குள் நுழைந்தது. யானைகளின் தொடர் அச்சுறுத்தலால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறது.

மாலை நேரமாகியதும், யானைகள் ஊருக்குள் நுழைந்து விடுவதால் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தற்போது, இந்த வீடுகளையும் யானைகள் இடித்து தள்ளுவதால் செய்வதறியாது தவிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, நெல்லிமலை பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும், யானைகளால் தங்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...