பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு வழங்கப்படும் நிர்பயா நிதி ரூ. 800 கோடியாக அதிகரிப்பு

நீலகிரி : பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி, தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளதாக மகளிர் ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி, தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளதாக மகளிர் ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். 

குன்னூரில் உள்ள வெறிநாய்க்கடி மருத்துவமனையான பாஸ்டியர் ஆய்வகத்தில் நடைபெற்ற மகளிர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை, மகளிர் ஆணையம் உன்னிப்பாக கவனித்து சம்பந்தப்பட்ட துறைக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மேலும், குற்றச் செயல்களை தடுப்பதற்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் புகார்களை பதிவிட இலவச அழைப்பு எண்களை அளித்து வரப்படுகிறது. 

வெளிநாடுகளில் வாழும் இந்திய பெண்களுக்கு நடக்கும் குற்றச்செயல்களைக் கூட அந்த நாட்டு வெளியுறவுத்துறையுடன் தொடர் கொண்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், தோட்டத்தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு, ஆண்களால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அல்லது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தாலோ 1091 என்ற எண்ணிலோ அல்லது காவல்நிலையம் எண்ணான 100-க்கு தொடர்பு கொள்ள அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறோம். மேலும், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளது. எனக் கூறினார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...