எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் 3-வது அணிக்கு ஸ்டாலின் ஆதரவு : காங்கிரசுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளியா..?

பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாமல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் மெகா கூட்டணிக்கு தி.மு.க. செயல்தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாமல் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கும் மெகா கூட்டணிக்கு தி.மு.க. செயல்தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார். 

தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க, காங்கிரஸ் இல்லாத மெகா கூட்டணியை உருவாக்க மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தெலுங்கானா மற்றும் ஆந்திர முதலமைச்சர்களும் முயற்சித்து வருகின்றனர். இந்தக் கூட்டணியில் தி.மு.க.,வை இணைய வருமாறு மார்ச் மாதம் செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு விடுத்தார். இதன் தொடர்ச்சியாக இம்மாதம் சென்னை வந்து தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்திக்கவும் மம்தா திட்டமிட்டிருந்தார். ஆனால் மம்தாவின் அழைப்புக்கு தி.மு.க. தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மாநில கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிக்கு தி.மு.க., எப்போதும் ஆதரவு அளிக்கும். பா.ஜ.க.,வின் ஜனநாயக விரோத, சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பல்வேறு மாநில கட்சிகளை இணைக்கும் மம்தாவின் முயற்சியைப் பாராட்டுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரை காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்து வரும் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., அல்லாத 3-வது அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு தி.மு.க., வந்துள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...