கோவை வ.உ.சி பூங்காவில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் திடீர் ஆய்வு

கோவை : கோவை வ.உ.சி. பூங்காவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கோவை : கோவை வ.உ.சி. பூங்காவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 



கோவை மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங்,  சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, வ.உ.சி உயிரியல் பூங்காவில் நடைபெறவுள்ள மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். வ.உ.சி. உயிரியல் பூங்காவில் மான்கள், மயில்கள், குரங்குகள் காப்பிடங்களையும், பாம்புகள் பண்ணையினையும் அவர் பார்வையிட்டார். பின்னர், உயிரியல் பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகளுக்கான ரயில் நிலையத்தைப் பார்வையிட்டு, பொதுமக்களுடன் ரயிலில் பயணித்து ஆய்வு செய்தார். 



பின்னர், கோவை மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில், மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், சாலைகள், மின்விளக்குகள், குடிதண்ணீர், பாதாள சாக்கடைகள் மேலாண்மைப் பணிகள், துப்புரவு தூய்மைப் பணிகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடைபெற்று வரும் பணிகள் பற்றியும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் அதிகாரி ஹர்மந்தர் சிங் கலந்தாய்வு மேற்கொண்டார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...