கெயில் விவகாரம்: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் - விவசாயிகள்

கோவை: கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அக்குழுவைச் சேர்ந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி ஆகியோர், கெயில் நிறுவனம் மத்திய அரசின் உதவியுடன் மீண்டும் விவசாயிகள் நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினர்.



மேலும், தமிழகத்தில் ஒசூர் வழியாக வாளையாறு வரை கோவை, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியார்க்க எரிவாயு குழாய் பதிக்கத் திட்டமிட்டுள்ளது என்றும், இவற்றை வகை செய்யும் இந்திய டெலிகிராப் சட்டங்களை எதிர்த்து சட்ட எதிர்ப்பு மாநாட்டினை ஒசூரில் ஏப்ரல் 29 ம் தேதி நடத்த உள்ளோம் என்றனர்.

மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...