மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவமே: இயக்குநர்

கோவை: மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவம் என அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை: மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவம் என அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வசனங்களே இல்லாமல் வெளிவந்துள்ள மெர்குரி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக், நடிகர்கள் சனந்த், தீபக் ஆகியோர் கோவையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் கண்டுகளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் இயக்குநர் கார்த்திக் பேசுகையில், "மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட் உலகின் ஆதிக்கத்தை மொழி வேறுபாடு இல்லாமல் எடுத்துரைக்கிறது. எனவே, வசனங்கள் இல்லாத சைகை மொழி படத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். மெர்குரி கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவமாக உள்ளது. இப்படத்தில், கார்த்திக், பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் போராட்டம் காரணமாக படம் தாமதமாக வெளியான போதும், படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இந்தப் படத்தில் நடித்தவர்களை பாராட்டினார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படத்தின் கதை முதல்கட்ட அளவிலேயே இருக்கிறது," என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...