கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், பட்டாணி பறிமுதல்

கோவை: கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்போது மாநகரில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.



அதன்படி, கடந்த வாரம் தாமஸ் வீதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலன தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், மாநகரில் உள்ள வணிக வளாகங்கள், பழக்கடைகள், குளிர்பானக் கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, சுமார் 25 கிலோ பச்சைப் பட்டாணி, 70 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.



உணவு பாதுகாப்புத் துறை சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி நடத்தப்பட்டதும், அதில் கலப்பட உணவுகளை கண்டறிதல் குறித்த செய்முறை விளக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...