பிரதமரை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தவர் கைது: கோவை மாநகர போலீஸ் நடவடிக்கை

கோவை: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக செல்போனில் பேசிய ரபீக் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக செல்போனில் பேசிய ரபீக் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் ரபீக் (53).

வழக்கில் இருந்து விடுதலையான இவர் சேலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் செல்போனில் உரையாடுவது போன்ற ஆடியோ சமீபத்தில் வெளியானது. அந்த ஆடியோவில், "பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், காவல் ஆய்வாளர் கணேஷ் தலைமையிலான போலீசார் ரபீக்-ஐ தேடி வந்தனர்.

இந்த நிலையில், இன்று மாலை அவரை கரும்புக்கடை பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், தற்போது வெளியாகியுள்ள ஆடியோவில், தான் 160 வாகனங்களை அடித்து உடைத்ததாக ரபீக் கூறியுள்ள நிலையில், பொதுமக்கள் யாராவது ரபீக்கால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக புகார் அளிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

ரபீக் மீது ஏற்கனவே (போக்கிரி) சரித்திரப் பதிவேடு தொடங்கியிருப்பதும், அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...