காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தால் தற்கொலை செய்வோம்: அய்யாக்கண்ணு

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தினால் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும், இல்லையெனில், தற்கொலை செய்வோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தினால் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும், இல்லையெனில், தற்கொலை செய்வோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும், ஆனைமலை நல்லாறு திட்டத்தை 9-ம் தேதிக்குள் நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். கெயில் எரிவாயு மற்றும் உயர்மின் கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக் கூடாது. விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்களில் நுழையக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்காவிடில், டெல்லியில் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம். முடியாவிடில் தற்கொலை செய்வோம்," என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...