தனிநபர் கழிப்பறையை அகற்றுமாறு வனத்துறையினர் மிரட்டுவதாக ஆதிவாசி மக்கள் புகார் மனு

நீலகிரி: நீலகிரியில் தனிநபர் கழிப்பறைகளை அகற்றுமாறு வனத்துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பெட்ட குறும்பர் ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரியில் தனிநபர் கழிப்பறைகளை அகற்றுமாறு வனத்துறையினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக பெட்ட குறும்பர் ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தெப்பக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் பல்வேறு ஆதிவாசி இன மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இதில், யானை கேம்ப்பாடி என்னும் கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு அரசு அறிவித்த சலுகைகள் இதுவரை கிடைத்து வந்தது. வனவிலங்குகள் அதிகமாக அச்சுறுத்தல் உள்ள இந்தக் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு ரூ. 12,000-ம், பணி முடியாத நிலையில் இருக்கும் கழிப்பிடம் கட்ட, மேலும் ரூ. 5,000-ம் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்று இங்குள்ள ஆதிவாசி மக்கள் இப்பணிகளை முடித்தனர்.

இந்நிலையில், வனத்துறை இங்கு கட்டிய கழிப்பிடங்களை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஆதிவாசி இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது ;- வனவிலங்கு அச்சுறுத்தல் உள்ள எங்கள் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் வனப்பகுதியில் செல்லாமல் இருக்க தனிநபர் கழிப்பிடம் கட்டியும், அதைப் பயன்படுத்த முடியவில்லை. வனத்துறையினர் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. எனவே, கிராமத்தில் உள்ள கழிப்பிடங்களை வனத்துறையினர் அகற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...